செய்தி விளையாட்டு

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் அஞ்சல் ஓட்ட போட்டிகளில் தங்கம் வென்ற இலங்கை அணி

இந்தியாவின் ராஞ்சியில் (Ranchi) நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (South Asian Athletics Championships), ஆண்கள் மற்றும் பெண்கள் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட (Relay) போட்டிகளில் இலங்கை அணி தங்கம் வென்றுள்ளது.

இலங்கையின் ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட அணி 39.99 வினாடிகளில் சிறப்பான நேரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

அவர்களை தொடர்ந்து, இலங்கையின் பெண்கள் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட அணி 44.70 வினாடிகளில் போட்டியை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதற்கிடையில், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்ட போட்டியில் இலங்கையின் கலிங்க குமாரகே (Kalinga Kumarage) 46.21 வினாடிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!