இலங்கை

இலங்கையில் தொழிற்சாலையில் விபத்து – இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

மஸ்கெலியா, மவுசாகலை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையான கிட்ண்ணன் விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஆராய்ந்த பிறகு , சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!