இலங்கை

அமெரிக்கா செல்லும் இலங்கை ஜனாதிபதி – பல்வேறு அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளையதினம் அமெரிக்கா நோக்கி பயணமாகவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வில் கலந்து கொள்ளும் நோக்கில் அவரின் விஜயம் அமைந்துள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா சபையில் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இலங்கையின் சமகால முன்னேற்றம் குறித்தும் தெளிவுபடுத்தவுள்ளார்.

அதேவேளை அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 26ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான தூதுக்குழுவினரும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்