ஜேர்மன் செல்லும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (25.09) இரவு ஜனாதிபதி ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேர்லின் குளோபல் உரையாடலில் பங்கேற்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு உலகளாவிய தீர்வுகளைக் கண்டறிவதற்கான பெர்லின் குளோபல் உரையாடல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
(Visited 16 times, 1 visits today)





