மலேசியாவில் மின்சாரம் தாக்கிய உயிரிழந்த இலங்கை பிரஜை!

மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கியதில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.
இறந்த இளைஞனின் உடலில் எந்த காயங்களும் இல்லை எனவும், மேலும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 35 times, 1 visits today)