இலங்கை

இலங்கைக்கு கிடைக்கவுள்ள 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முடிவு செய்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் விசேட கொள்கை அடிப்படையிலான கடனாக வழங்க தீர்மானித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி இன்று அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஊடாக வழங்கப்படும் விரிவான நிதி உதவிப் பொதியின் ஒரு பகுதியே இந்த கடன் வசதி என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்த நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்முதல் விலை 289 ரூபா 89 சதமாக பதிவாகியுள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலை 303 ரூபா 26 சதங்களாக பதிவாகியுள்ளது. இதன்மூலம், டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்முதல் விலை சுமார் ஓராண்டுக்குப் பிறகுதான் 300 ரூபாய்க்கும் கீழ் சரிந்தது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!