இலங்கை

இலங்கை – மஸ்கெலியாவில் மண் மேட்டுக்குள் சிக்கிய அறுவர் பத்திரமாக மீட்பு

மஸ்கெலியா ராணி தோட்டத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு அடித்தளம் வெட்டிக் கொண்டிருந்த வேளையில் புதன்கிழமை (06) காலை 11.45 மணி அளவில் திடீரென மண் திட்டுகள் சரிந்ததால் மண்ணில் புதையுண்டன ஆண்கள் அறுவர், பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

சம்பவத்தை கண்டவர், அபாய குரல் எழுப்பியுள்ளார். அதை கேட்டு, ஓடோடி வந்தவர்கள், அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சி செய்தனர். இந்நிலையில், சம்பவத்தை கேள்வியுற்ற மஸ்கெலியா பிரதேச சபை தலைவர், சபையின் உப- தலைவர் மற்றும் உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து அறுவரையும் காப்பாற்றினர்.

காப்பாற்றப்பட்ட யதுர்ஷன் (வயது 28), யோகேஸ்வரன் (வயது 45), ராஜேஸ்வரன் (வயது 38), விஜயலிங்கம் (வயது 45), விஜயகுமார் (வயது 43) மற்றும் ஆறுமுகம் (வயது 45) ஆகிய அறுவரும், சிறு சிறு காயங்களுடன் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content