இலங்கை: பச்சை குத்தி இருந்தால் போலீஸ் வேலை இல்லை – மூத்த காவல்துறை அதிகாரி
இலங்கை காவல்துறை, காவல்துறையில் சேருவதற்கான விதிகளை கோடிட்டுக் காட்டும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் காணொளியை வெளியிட்டுள்ளது.
தனது உரையில், பச்சை குத்திய நபர்கள் காவல் துறையினாலோ அல்லது முப்படையினாலோ பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
“உங்களிடம் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் இருக்கலாம். ஆனால் நீங்கள் பச்சை குத்தியிருந்தால், இலங்கை காவல்துறையினாலோ அல்லது முப்படையினாலோ பணியமர்த்தப்பட மாட்டீர்கள். தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு. உங்கள் தோலை அழிப்பது நல்லதல்ல,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





