இலங்கை

இலங்கை : பொதுபோக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புதிய முயற்சி!

பொது போக்குவரத்து சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நடவடிக்கையின் மூலம், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகம் பயன்படுத்தும் 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், 17.00 முதல் 19.00 மணி வரையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிக முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு சிவில் உடை அணிந்த பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் பஸ்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படுவதோடு, வீதிகள், பஸ் நிலையங்கள், புகையிரத நிலையங்கள் போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும்.

சிவில் உடையில் பயணிக்கும் உத்தியோகத்தர்களுக்கு உதவி தேவைப்படும் போது உதவிகளை வழங்குவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களின் குழுக்களை சிவில் உடையில் (குறிப்பாக பிரதான வீதிகளை உள்ளடக்கி) தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 17 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்