இலங்கை செய்தி

இலங்கை: மொரகஹஹேன அருகே இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி மரணம்

களுத்துறை மாவட்டம் மொரகஹஹேன (Moragahena) நகருக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் ஹொமாகம(Homagama) பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

ஹொரணையில்(Horana) இருந்து மொரகஹேன நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி திடீரென கவிழ்ந்து எதிர் பாதையில் சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்திற்கு பிறகு குறித்த நபர் ஹொரணையில் உள்ள அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், விபத்துக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஹொரணை காவல்துறை தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!