இலங்கை

இலங்கையில் அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அனுமதி

இலங்கையில் அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.”

சுகாதாரத் துறைக்கு 9,000 நியமனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 7,200 வெற்றிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எஞ்சிய நியமனங்களை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் சேவையின் தேவையைக் கருதாமல், அரசியல் ரீதியான நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.

ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!