இலங்கையில் அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அனுமதி
இலங்கையில் அரச சேவைக்கு 72,000 புதிய பணியாளர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.”
சுகாதாரத் துறைக்கு 9,000 நியமனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 7,200 வெற்றிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எஞ்சிய நியமனங்களை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் சேவையின் தேவையைக் கருதாமல், அரசியல் ரீதியான நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)





