இலங்கை

இலங்கை : மலையகத்தில் 120 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

நல்லதண்ணியா கோவிலில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் உணவு விஷமாகியமையால் 120 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிலின் தஞ்சை ஒன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மக்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 25 பேர் பிரதேச வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியதாகவும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்காக பெற்றுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!