இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்கின்றார்.

எனினும் அவ்வாறு வாகனங்கள் பெற்றுக் கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு வழங்கும் போர்வையில் பல நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது நிறுவனம் குறித்து நன்கு ஆராய்ந்து அதற்குப் பின்னர்  வாகனங்களை வாடகைக்கு எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாகனங்களை வாடகைக்கு வழங்குவதாக கூறி விளம்பரப்படுத்தி இணையவழி ஊடாக பணத்தைப் பெற்றுக்கொண்டு வாடகை சேவையை வழங்காமல் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்