இந்தியா செய்தி

புனேவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மென்பொருள் பொறியாளர் கைது

பாகிஸ்தானின் அல்-கொய்தா(Al-Qaeda) போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் பங்கு வகித்ததாகவும் கூறி, மகாராஷ்டிரா(Maharashtra) பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) புனேவில்(Pune) ஒரு மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளது.

கடந்த மாதம் முதல் புனே பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கண்காணிப்பில் இருந்த 33 வயதான ஜுபைர் ஹங்கர்கேகர்(Zubair Hunkarkekar) இன்று கோந்த்வா(Gondwa) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, ஹங்கர்கேகரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் அல்-கொய்தா இலக்கியங்கள் மற்றும் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் அல்-கொய்தா செயல்பாட்டாளர்களுடன் அல்லது பிற தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தாரா, அவர் வைத்திருந்த பொருட்களை கொண்டு என்ன செய்ய விரும்பினார் என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக பயங்கரவாத எதிர்ப்புப் படை தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!