பிரித்தானியாவில் புன்னகைக்கும் நீர்நாய் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

பிரித்தானியாவில் புன்னகை நீர்நாய் ஒன்று பிரபலமடைந்துள்ளது.
ஏலி (Ely) நகரின் River Cam நதிக்கரையில் நீர்நாய் குளிர்காயும் படங்களை ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தார்.
குளிர்காய்வதில் அது காட்டிய இன்பம் இணையவாசிகளைக் கவர்ந்தது. திங்கட்கிழமை Sophie Bell என்ற பெண் குடும்பத்துடன் படகில் பயணம் மேற்கொண்டார்.
வட்டாரத்தில் நீர்நாய் இருப்பதாகச் சுற்றுலாக் குழுவினர் கூறியிருந்தனர்.
அதைப் பார்ப்பதற்குச் சென்ற குடும்பம் நீர்நாயைக் கரையில் படுத்துக் கிடப்பதைக் கண்டுபிடித்ததாக குறிப்பிட்டுளு்ளனர்.
அப்போது நீர்நாயின் முகத்தில் புன்னகை இருந்தது. காட்சியின் படங்கள் சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்டன.
(Visited 19 times, 1 visits today)