செய்தி விளையாட்டு

SLvsBAN – சமநிலையில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய ஐந்தாம் நாளில் 296 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய ஆட்ட நேர நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றிருந்தது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 484 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, அணித்தலைவர் ஷான்டோவின் அபாரமான சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதற்கமைய, பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 296 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்த டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் எஞ்சலோ மெத்யூஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி