இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்து வேட்டை!

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு( PSTA) என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மூன்றலில் இன்று (27) தபால் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கு மக்கள் ஏற்பாட்டில் இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் வரைவை கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது.

மக்கள் தமது கையொப்பத்தை இட்டு, அதனை தபால் பெட்டிக்குள் இட்டனர்.

கையெழுத்துகள் திரட்டப்பட்ட பின்னர் அவை நீதி அமைச்சுக்கு அனுப்ப வைக்கப்படும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!