இலங்கை

G.C.E O/L பரீட்சைதான் மாணவரின் வெற்றியை தீர்மானிக்க வேண்டுமா ?

ஒரு மாணவரின் வெற்றியை (G.C.E) சாதாரண பரீட்சைதான் தீர்மானிக்க வேண்டுமா என்பது குறித்து   அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அலரி மாளிகையில் இன்று (16)   இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் கூறினார்.

இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து 7,342 ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலைகளுக்கு 1,729 ஆசிரியர்களும், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 626 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் 10 வருடங்களில் கல்வித்துறையில் ஏற்படவுள்ள தொழில்நுட்ப மாற்றங்களுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!