மத்திய கிழக்கு

காஸாவில் அதிர்ச்சி – 6 வாரச் சிசு பட்டினியால் உயிரிழப்பு

காஸாவில் 6 வாரங்கள் வயதான ஆண் சிசு ஒன்று உணவின்மையால் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.

பால் கொடுக்க பால் மாவு கிடைக்கவில்லை. எங்கும் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் விலை மிகவும் அதிகம் என யூசப் என்கிற அந்த சிசுவின் உறவினர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள் பலர், தற்போது காஸாவில் பசியால் உயிரிழப்பது மேலும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர், இதற்கான பாதிப்பில் சிறுவர்களும் அடங்குவர்.

2023ஆம் ஆண்டு அக்டோபரிலிருந்து காஸாவில் பலர் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர். இஸ்ரேலிய ராணுவத்தினால் சுமார் 60,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மேலும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

இந்த போர் தொடங்கியதிலிருந்து, பரிதாபமாக, பசியால் உயிரிழந்தவர்கள் தற்போது அதிகரித்துள்ளதென அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இஸ்ரேல் காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் அனுப்புவதற்கு தடைவிதித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் அதன் உணவுப் பற்றாக்குறைக்கு பொறுப்பில்லை என்று தெரிவித்து, ஹமாஸ் அமைப்பினர் அந்த உதவிகளை திருடுவதாக குற்றம்சாட்டியுள்ளது. ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.