இலங்கை செய்தி

அரசாங்கத்தை கலைக்க இரகசிய பேச்சுவார்த்தை

பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் மூலம் பிரதிநிதிகள் சபையை கலைப்பது தொடர்பில் ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடங்கிய குழு இரகசிய கலந்துரையாடலை நடத்தியதாக தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் சிங்கள புது வருடத்தின் பின்னர் சபையை கலைப்பு தொடர்பில் இரு கட்சிகளின் சிரேஷ்டர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதில் ஆர்வமுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு கணக்கிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இரு கட்சிகளின் சிரேஷ்டர்களுக்கிடையிலான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கட்சித் தலைவர்களிடம் முன்வைத்து இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரகசிய கலந்துரையாடலுக்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை