ஐரோப்பா

ஸ்பெயினில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை – அமுலாகும் தடை

ஸ்பெயினில் வெப்பநிலை அங்கு 39 டிகிரி செல்சியஸுக்கு மேல் கூடினால் வேலைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பநிலையால் வெளிப்புற வேலைகள் சிலவற்றுக்குத் தடை விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஸ்பெயினின் தேசிய வானிலை அமைப்பு மோசமான வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை விடுக்கும்போது சில வெளிப்புற வேலைகள் நிறுத்தப்படும். சாலைகளைத் துப்புரவு செய்தல், கட்டுமானப் பணிகள், விவசாயம் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

நாட்டின் சில பகுதிகள் தொடர் வறட்சியால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றன. அத்தகைய இடங்களுக்கு உதவ ஸ்பெயின் அரசாங்கம் 2.4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவுத் திட்டத்தை அறிவித்தது.

ஸ்பெயினில் கடந்த ஏப்ரல் மாதம் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. அந்நாடு இதுவரை கண்டிராத வெப்பநிலை அதுவாகும். இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில் வழக்கமாகப் பெய்யும்
மழையின் அளவு குறைந்தது. பாதி அளவுக்கும் குறைவாகவே மழை பொழிந்தது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்