இலங்கையில் இன்று முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பம்

இலங்கையில் இன்று முதல் பாடசாலை விடுமுறை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 37 times, 1 visits today)