அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

மூன்றாக மடிக்க கூடிய Samsung Galaxy G Fold – கசிந்த தகவல்

சாம்சங் நிறுவனத்தின் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனுக்கு கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயர் வைக்க இருப்பதாக தென் கொரியாவின் நேவர் பிளாட்ஃபார்மில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங், அதன் முதல் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு, அதன் அடுத்த தலைமுறை ஃபோல்டபிள் சீரிஸுடன் வெளியிடும் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால் ​, சமீபத்திய வதந்தி ஒன்று, நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று பெயரிடக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டில் இந்த யோசனையை அறிமுகப்படுத்தியபோது, நிறுவனம் இதை மல்டி-ஃபோல்டு போன் என்று அழைத்திருந்தது. ஆனால், இப்போது வரை எந்த அதிகாரப்பூர்வ பெயரும் அதற்கு வைக்கப்படவில்லை.

தென் கொரியாவின் சர்ச் இன்ஜினான நேவரில், லான்சுக் கூற்றுப்படி, சாம்சங்கின் வரவிருக்கும் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போன், கேலக்ஸி இசட் தொடரில் சேர்க்கப்படாது, மாறாக கேலக்ஸி ஜி ஃபோல்டு என்று அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போனை சாம்சங் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் ஜனவரி 2026 இல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹவாய் மேட் எக்ஸ்டி போலல்லாமல், சாம்சங்கின் ட்ரை-ஃபோல்டு இருபுறமும் மடிக்கக்கூடியதாக இருக்கும் மற்றும் முழுமையாக விரிக்கப்படும்போது, 9.96-இன்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளேவையும், 6.54-இன்ச் உயரமும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஹவாய் மேட் எக்ஸ்டி மற்றும் கேலக்ஸி ஜி ஃபோல்டு ஆகியவை கிட்டத்தட்ட ஒரே எடையில் இருக்கவே வாய்ப்புள்ளது என்றாலும், சாம்சங் டிரிபிள்-ஃபோல்டு ஸ்மார்ட்போன் சற்று தடிமனாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய அறிக்கைகள், சாம்சங்கின் இந்த ட்ரை-ஃபோல்டு ஸ்மார்ட்போன் ஜி போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும், அதன் வெளிப்புற ஸ்கிரீன்கள் உள்நோக்கி மடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.

வடிவமைப்பைப் பொறுத்தவரையில், ஹவாயின் மேட் எக்ஸ்டி-க்கும், சாம்சங்கின் இந்த மாடலுக்கும் நிறைய முரண்பாடு இருக்க வாய்ப்புள்ளது. இது உள்நோக்கி மற்றும் வெளிப்புறமாக மடிக்கும் எஸ் அல்லது இசட் வடிவத்தைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங்கின் இந்த வடிவமைப்பு, நீடித்துழைக்கும் என்பதைக் காட்டுகிறது.

சாம்சங்கின் ட்ரை-ஃபோல்டு ஸ்மார்ட்போன் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் குறைவாகவே உள்ளன. இது 12.4-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்றும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் என இரண்டிற்கும் மாற்றாக தனித்து நிற்கும் என்றும் கூறப்படுகிறது. ஹவாய்யின் 10.2-இன்ச் மேட் எக்ஸ்டி -ஐ கூட மிஞ்சும் அளவிற்கு, பகுதியளவு விரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில், பார்வை அனுபவத்திற்காக 10.5-இன்ச் டிஸ்ப்ளேவையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்காக சாம்சங் முக்கிய திட்டங்களை வைத்திருப்பதாக தெரிகிறது. கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு மற்றும் கேலக்ஸி எஸ்25 தொடர் வெளியீட்டுக்கு பிறகு, நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

 

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி