ஐரோப்பா

100க்கும் மேற்பட்ட உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்ய பாதுகாப்பு படையினர்

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த முயன்ற 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. 7 பிராந்தியங்களில் 125-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள வோல்கோகிராட் மீது அதிக தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 67 உக்ரைன் ட்ரோன்களை ரஷ்ய பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வோரோனெஸ் பகுதியில் 17 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் மூலம் அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் ஒரு வீடும் தீப்பிடித்து எரிந்தன. இருப்பினும், இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் வனப்பகுதியில் தீ பிடித்தது. இதற்கிடையில் உக்ரைனின் ஜபோரிஷ்ஷியா மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 16 பேர் காயமடைந்தனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!