நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடும் ரஷ்யா!

ரஷ்யா தனது வரலாற்றில் முதன்முறையாக அடுத்த தசாப்தத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
2031 முதல் நிலவின் தளத்தை உருவாக்க உத்தேசித்துள்ளது என்று மனித விண்வெளி விமானங்களுக்கு பொறுப்பான ரஷ்ய கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செயற்திட்டமானது 2031 முதல் 2040 இற்கு இடைப்பட்ட காலத்திற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேர் இந்த திட்டமானது நிலவின் வளங்களை சுரண்டுவதற்கும் காரணமாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா மேற்கொண்ட முதல் நிலவு பயணமான லூனா 25 தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)