ஆஸ்திரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசு வழங்கிய ரஷ்யா!
ஆஸ்திரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு ரஷ்யாவில் சிறிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலின்போது ரஷ்ய தூதரகத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டமைக்காக இந்த பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இதுபோன்ற பரிசுகளை நிராகரிக்குமாறு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், ஆஸ்திரிய அரசாங்கம் வியன்னாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து இரண்டு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுவதாக அறிவித்தது, மேலும் இந்த வெளியேற்றங்கள் உளவு நடவடிக்கைகள் தொடர்பானவை என்று ஒரு அதிகாரி கூறினார்.
இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் அன்று தூதரக பாதுகாப்பிற்காக ஆஸ்திரிய பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





