உக்ரைனின் வெப்ப மின் உற்பத்தி நிலையத்தை தாக்கிய ரஷ்யா! தவிக்கும் மக்கள்!

கெய்வ் பகுதியில் உள்ள ஒரு வெப்ப மின் உற்பத்தி நிலையத்தை மொஸ்கோ தாக்கியதாக உக்ரைனின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று (08.07) காலை வரை ரஷ்யா 142 ட்ரோன்களை நாட்டிற்குள் ஏவியதாகவும், அவற்றில் சுமார் 100 ஷாஹெட் ஸ்ட்ரைக் ட்ரோன்கள் மற்றும் மீதமுள்ள டிகோய் கிராஃப்ட்கள் என்றும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
112 ட்ரோன்களை டிஃபென்டர்கள் சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உக்ரைனின் வீடுகள், மருத்துவமனைகள், மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்காக மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா மீது குற்றம சாட்டப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)