ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு ரொஷானின்” மனைவிக்கு ஆயுள்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 36 வயதுடைய விஜேசிங்க ஆராச்சிலாகே நிரோஷா என்ற பெண்ணுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த பெண், மட்டக்குளி பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடு ரொஷானின் மனைவி என்று கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையின் போது பிரதிவாதியான பெண்ணிடமிருந்து இந்த போதைப்பொருள் தொகை பறிமுதல் செய்யப்பட்டது.
(Visited 4 times, 4 visits today)