ஆசியா

தாய்லந்தில் பறவை கழிவால் உடைந்து விழுந்த கூரை – நால்வர் காயம்

தாய்லந்தின் Yasothon வட்டாரத்தில் இருக்கும் Kham Khuean Kaeo எனும் மாவட்டத்தில் திடீரென்று கூரை ஒன்று உடைந்து விழுந்துள்ளது.

ஒரு மண்டபத்தில் முக்கிய கண்காட்சி நிகழ்ச்சியின் போது மாணவர்கள், ஆசிரியர்கள், மாவட்ட அதிகாரிகள் பலர் கூடியிருந்தனர்.

மண்டபம் முழுதும் தூசியாலும் கூரையின் சிதைவுகளாலும் நிரம்பியது. நால்வர் காயமுற்றதாக தெரியவந்துள்ளது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கூரை உடைந்தற்கான காரணம் கூரையின் மீது பறவைகள் சில வெகு காலமாகத் தங்கியிருந்ததாகவும் அவை அங்கு தான் மலம் கழிப்பதாகவும் அது சுத்தம் செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

நாளடைவில் கழிவுகளின் பாரம் அதிகமானதால் கூரை பலவீனமானதாக குறிப்பிடப்படுகின்றது.

பழைய மண்டபத்தின் கூரை அதனால் உடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மண்டபத்தைச் சீரமைக்க முயற்சி எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!