விளையாட்டுத் துறையில் முதல் பில்லியனர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ
போர்த்துகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ரொனால்டோ ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை கொண்ட முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது இலாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தங்களை ரொனால்டோ செய்துள்ளார்.
அத்துடன் பிற வணிக முயற்சிகளால் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டமையினால் இந்த பெருமையை ரொனால்டோ அடைந்துள்ளார்.
இதன்மூலம் விளையாட்டுத்துறையில் முதல் பில்லியனர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு வரை பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான ரொனால்டோ நாசாரியோவின் சொத்து மதிப்பு சுமார் 160 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





