உலகம் செய்தி

ஏவப்பட்ட 30 வினாடிகளில் கீழே விழுந்த ரொக்கெட் – பிரேசிலுக்கு மற்றுமோர் பின்னடைவு!

பிரேசிலின் அல்காண்டரா (Alcantara) விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட வணிக ரொக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியதை தொடர்ந்து அந்நாட்டின் விண்வெளி இலட்சியங்களில் குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரிய நிறுவனமான இன்னோஸ்பேஸால் (Innospace) இயக்கப்பட்ட இந்த ரொக்கெட் பறந்து சென்ற 30 வினாடிகளில்  செயலிழப்பை சந்தித்து, முன்னரே நியமிக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்திற்குள் விழுந்தது.

இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றபோதிலும் பிரேசிலின் விண்வெளி கனவு திட்டத்தில் குறிப்பிட்ட சரிவு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து  இன்னோஸ்பேஸ் (Innospace ) தலைமை நிர்வாக அதிகாரி கிம் சூ-ஜாங் (Kim Soo-jong ) பங்குதாரர்களிடம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பத்தால் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 29% சரிவை சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த முயற்சி அடுத்த ஆண்டிலும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2003 ஆம் ஆண்டு   அல்காண்டராவில் நடந்த ஒரு ரொக்கெட் வெடிப்பில் 21 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரேசிலின் விண்வெளித் திட்டம் தாமதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!