ஐரோப்பா

இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரிஷி சுனக் : 105 பேர் கைது!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சட்டவிரோத குடியேறிகள் குறித்து மேற்கொண்ட சோதனையில் 105 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷி சுனக் இந்த வார தொடக்கத்தில், உள்துறை அலுவலக அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான சோதனையை மேற்கொண்டார்.

இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக இங்கிலாந்தில் தங்கியிருந்த சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த 105 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் ரிஷி சுனக் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனது அரசாங்கத்தின் முதன்மையான வாக்குறுதியான சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன்,  “சட்டவிரோத வேலை எங்கள் சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது, நேர்மையான தொழிலாளர்களை வேலையில் இருந்து ஏமாற்றுகிறது. மற்றும் வரி செலுத்தப்படாததால் பொதுப் பணத்தை ஏமாற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்