ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வறுமையில் உறவினர் பராமரிப்பாளர்கள் – சோபாவில் தூங்க வேண்டிய நிலை

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 1,41,000 குழந்தைகள் பெற்றோர்களால் பராமரிக்க முடியாமல், உறவினர் அல்லது நண்பர் வீட்டில் வளர்க்கப்படுவதாக, கிம்ஷிப் (Kinship) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல உறவினர் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை தங்க வைக்க, தங்கள் சொந்த படுக்கையறைகளை விட்டு சோபாவில் தூங்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். இதனால் உடல் வலியும், வறுமையும் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மதிப்பீடுகளின் படி, ஒரு குழந்தையை 18 வயது வரை வளர்ப்பதற்கான செலவு £250,000 பவுண்டுகள் ஆகும், இரண்டு குழந்தைகள் இருந்தால் அது அரை மில்லியன் பவுண்டுகள் ஆகும். இது பெரும்பாலான குடும்பங்களுக்குத் தனிப்பட்ட வீடு வாடகைக்கு எடுத்துக் கொள்வதை கடினமாக்குகிறது.

பல உறவினர் பராமரிப்பாளர்கள் நிதி உதவி, உணர்ச்சி ஆதரவு அல்லது நடைமுறை ஆதரவு இன்றி தினசரி வாழ்க்கையில் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிம்ஷிப் தொண்டு நிறுவனம் இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

“சோபா படுக்கையில் தூங்க வேண்டிய நிலை கவலைக்குரிய. பலர் கடனில் மூழ்கி, சேமிப்பையும், ஓய்வூதியத்தையும் பயன்படுத்துகின்றனர்” எனவும் கிம்ஷிப் தெரிவித்துள்ளது.

அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் உறவினர் பராமரிப்பாளர்களுக்கு நிதி மற்றும் நடைமுறை ஆதரவு வழங்கும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

“குழந்தைகளை குடும்பத்திலேயே பாதுகாப்பாக வைத்திருப்பதை அதிகரிப்பதே எங்கள் முக்கிய இலக்கு.” என்று கல்வித் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில், உறவினர் பராமரிப்பு மூலம் குழந்தைகள் வீட்டில் பாதுகாப்பாக வளர்கின்றனர், மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!