இந்தியா

எம்.ஜி.ஆர் சிலை மீது சிவப்பு பெயிண்ட் பூசிய மர்ம நபர்கள்!

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் சிலை, புதன்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சிவப்பு பெயிண்ட் பூசி சேதப்படுத்தப்பட்டது.

சிலை அமைந்துள்ள சென்னை ராயபுரம் அருகே காலிங்கராயன் தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று நள்ளிரவு இந்த சிலை மீது, அடையாளம் தெரியாத நபர்கள், சிவப்பு சிற பெயின்டை பூசி அவமதிப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக பகுதி செயலாளர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ராயபுரம் பகுதியை சேர்ந்த அக்கட்சியினர் கூறுகையில், “தினமும் காலையில் இங்கு வந்து தலைவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறோம். இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்தபோது சிலைக்கு மேல் சிவப்பு பெயின்ட் அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

 

(Visited 10 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content