இலங்கை செய்தி

ரணில் -சஜித் விரைவில் நேரடி சந்திப்பு!

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பு இடம்பெறவுள்ளது.

2026 ஜனவரி முற்பகுதியளவில் மேற்படி சந்திப்பு நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (31) நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன Ruwan Wijewardene, சிரேஸ்ட உப தலைவர்களான அகில விராஜ் காரியவசம் Akila Viraj Kariyawasam, நவீன் திஸாநாயக்க Naveen Dissanayake ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது இரு தரப்பு இணைவு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.

இரு தரப்பு இணைவு குறித்த பேச்சுகளின்போது அரசியல் சதிகளுக்கு இடமளிக்காது, வெளிப்படை தன்மையுடன் செயல்பட இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

அதேபோல ரணில் மற்றும் சஜித்துக்கிடையிலான நேரடி சந்திப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் ஜனவரி முற்பகுதியில் சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே இணைவு குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!