இலங்கை செய்தி

புகையிரத வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது – போக்குவரத்து அமைச்சு

புகையிரத சேவைகள் உள்ளிட்ட பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அதிபர்கள் சங்கம் முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு சட்டவிரோதமானது என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், கடமைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம் காரணமாக அலுவலக புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டால், இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூபசிங்க தெரிவித்தார்.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் புகையிரத சீசன் டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!