போரை புட்டின் நிறுத்துவார் என தோன்றவில்லை: டொனால்ட் ட்ரம்ப் விரக்தி

உக்ரைன் உடனான போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் விடயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, “நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவேன்.” என ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
இரண்டாவது முறையாக டொனால்ட் டரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் அமெரிக்க அதிபரானதில் இருந்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டரம்ப், விளாடிமிர் புட்டினுடன் 5 முறை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைக்கும்ப் பிறகும் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த டொனால்ட் டரம்ப், கடைசியாக கடந்த வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்முறையாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளார்.