இலங்கை

இலங்கையில் போலி காவல்துறையினர் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் காவல்துறை சீருடை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றும் போலி நபர்கள் பற்றி கவனமாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய சீருடையில் வீடுகளுக்கு வருகை தருவோரின் ஆள் அடையாளங்களைச் சோதிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என காவல்துறை ஊடகப் பேச்சாளரான உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார்.

வீடுகளுக்கு வருவோரிடம் காவல்துறையின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பொதுமக்கள் கேட்க முடியும்.

சந்தேகம் ஏதும் இருப்பின் உடனடியாக அதிகாரிகளுக்கு முறையிட வேண்டும்.

மேலும், தமது வலயத்திற்குப் பொறுப்பான காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கத்தை வைத்திருப்பது முக்கியமானதெனக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!