பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால Ananda Wijepala உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி UNP இன்று (16) வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேற்படி சம்பவம் நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை CID
அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதால், இந்தப் படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நிகழ்ந்த கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
மேலும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





