பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை: மஹிந்த
“ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என நான் கூறமாட்டேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தெரிவித்தார்.
தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கில பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கல்வி அமைச்சு பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சியெடுத்தாலும், வேலைத்திட்டமென்பது தோல்வி அடைகின்றது எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.
ஊடகங்களிடம் சிறிது நேரமே கருத்து வெளியிட்ட பின்னர், பிரிதொரு நாளில் பேசுவோம் எனக் குறிப்பிட்டு அங்கிருந்து மஹிந்த ராஜபக்ச விடைபெற்றார்.





