இலங்கை

ஜனாதிபதியின் இந்திய விஜயம் : தாயகப் பகுதி குறித்தே கவனம் செலுத்தப்படும் என்கிறார் அலிசப்ரி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது, இலங்கையின் வடகிழக்கு பகுதியில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான துறைமுக அபிவிருத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்தும் பெரும்பாலம் இலங்கையின் வடபகுதி குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனக் கூறினார்.

குறிப்பாக  “திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி, துறைமுக அபிவிருத்தி, உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவித்த அவர்,  திருகோணமலை துறைமுகத்தை பெரிய துறைமுகமாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்ய இரு நாடுகளும் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் துறைமுகப் பகுதிகளில் ஆதிகம் செலுத்த இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகள் நீண்டகாலம் போட்டியிட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், சீனாவின் இரண்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியே வரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content