இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!
தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்குத் தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வினைத்திறன் மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்களுக்காகப் பாடுபடும் அரச அதிகாரிகள் எதிர்காலத்தில் பாரம்பரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர், அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
(Visited 34 times, 34 visits today)