இலங்கை செய்தி

இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்குத் தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வினைத்திறன் மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டு மக்களுக்காகப் பாடுபடும் அரச அதிகாரிகள் எதிர்காலத்தில் பாரம்பரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர், அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!