இலங்கை

முதலிடத்தை பிடித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் அரசியல் வாதிகளின் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தை பிடித்துள்ளார் .

கட்சிகளின் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி முதலிடத்தில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

சமகால அரசியல் நிலைவரம் மற்றும் மக்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்பது தொடர்பில் அரச நிறுவனமொன்று அண்மையில் நடத்திய கருத்து கணிப்பிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய அரசியல்வாதிகளுள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 33 வீதமானோரும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 16 வீதமானோரும், சஜித் பிரேமதாசவுக்கு 12 வீதமானோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கட்சிகளுக்கான செல்வாக்கு பட்டியலில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது. மக்கள் மத்தியில 21 சதவீத ஆதரவு கிடைத்துள்து. ஐக்கிய மக்கள் சக்திக்கு 17 வீதமும், மொட்டு கட்சிக்கு 15 வீதமும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 வீதமும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளதென கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

  • ‘ஹொலிகொப்டர்’ கூட்டணிக்கு 5 சதவீத ஆதரவும், சுதந்திரக்கட்சிக்கு 4 சதவீத ஆதரவு கிட்டியுள்ளது. சுமார் 24 வீதமானோர் கட்சி சார்பற்ற கொள்கையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!