இலங்கை

ஜெர்மனி நோக்கி பயணமான ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜெர்மனி நோக்கி பயணமானார்.

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இவ்வாறு ஜெர்மனி நோக்கி பயணித்துள்ளார்.

ஜெர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று அதிகாலை 5.05 அளவில் கட்டார் நோக்கி பயணித்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.659 ரக விமானத்தில் சென்றுள்ளனர்.

அங்கிருந்து அவர்கள் ஜெர்மனி நோக்கி செல்லவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 24ஆம் திகதி மீள நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!