விளையாட்டு

டி-20 அரங்கில் 14,000 ரன் அடித்த போலார்டு

டி-20′ அரங்கில் 14,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் போலார்டு.

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் ‘டி-20’ தொடர் நடக்கிறது. தரவுபாவில் நடந்த போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பார்படாஸ் அணிக்கு ரூதர்போர்டு (45), கதீம் (41), கேப்டன் ராவ்மென் பாவெல் (31) கைகொடுத்தனர். 20 ஓவரில் 178/6 ரன் எடுத்தது. ரசல் 3 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய டிரின்பாகோ அணிக்கு முன்ரோ, 44 பந்தில் 67 ரன் எடுத்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். 17.5 ஓவரில் 179/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பூரன் (40 பந்து, 65 ரன்), போலார்டு (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து போலார்டு, ‘டி-20’ அரங்கில் 14,000 ரன் (712 போட்டி) என்ற மைல்கல்லை எட்டினார். இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (463ல் 14,562 ரன்) உள்ளார். அடுத்த 4 இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் (507ல் 13,931, இங்கிலாந்து), வார்னர் (424ல் 13,595, ஆஸி.,), சோயப் மாலிக் (557ல் 13,571, பாக்.,), கோலி (414ல் 13,543) உள்ளனர்.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!