இலங்கை

இலங்கையில் வாகனங்களின் கண்ணாடி விதிகளை கடுமையாக்க தயாராகும் பொலிஸார்

இலங்கையில் வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளில் காட்சிப்படுத்தப்படும் பெயர்ப் பலகைகள் மற்றும் பதவிகள் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொலிஸார் தயாராகி வருகின்றனர்.

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் பெயர்ப்பலகைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் முன்பக்க கண்ணாடியை ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே கருமையாக்க அனுமதி உள்ளது.

அதுவும் கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் கருப்பு நிறமாக்க அனுமதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாகன வரி வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் இலக்கத் தகடுடன் வழங்கப்பட்ட ஸ்டிக்கர் ஆகியவற்றை மாத்திரமே கண்ணாடியில் காட்சிப்படுத்த முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்