இந்தியா

சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று காந்தியின் உடல்நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் கடந்த 18ம் திகதி இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சோனியா காந்தி ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து காணப்பட்டுள்ளார். அதன் தலைப்பில் கருணை வடிவம் அழுத்தமாக உள்ளது அம்மா என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மக்களவையில் சோனியாவின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தச் சுருக்கமான உரையாடல் நடைபெற்றுள்ளது. அவை தொடங்கியவுடன் பிரதமர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். அதற்கு சோனியா காந்தி, “நான் நலமாக இருக்கிறேன்” என்று பதிலளித்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து விவாதம் நடத்துமாறு சோனியா காந்தி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content