இலங்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டம் – தீவிர நடவடிக்கையில் அரசாங்கம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

அதற்கான நடவடிக்கைகளை அரசு செய்துவருகின்றதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு தாம் தயார் என எதிரணிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையிலேயே அதற்கான சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆவது கடன் தவணை எதிர்வரும் செப்டம்பரில் கிடைக்கப்பெறவுள்ளது. அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளன. சாதகமான நிலை நீடிக்கும் நிலையில் தேர்தலுக்கு சென்றால் சிறப்பு என அரசு கருதுகின்றது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content