இலங்கை

கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்க அனுமதி!

கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பேருந்துகளில் இருந்து வெளியேறும் புகைகயினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள்இ அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம் இவை இரண்டிற்கும் இதன் மூலம் தீர்வுக்காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘அனைத்து பொது போக்குவரத்து ஊடகங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றுவதே இதற்கான தீர்வாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பேருந்துகள் மட்டுமன்றி மின்சார முச்சக்கர வண்டிகள் வேன்கள். ரயில்களையும் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ இலங்கை போக்குவரத்து சபையினால் நாடு முழுவதிலும் உள்ள நஷ்டத்தில் இயங்கும் பல டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குணவர்தன குறிப்பிட்டார்.

(Visited 51 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்