கொலம்பியா ஜனாதிபதியின் தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக மக்கள் பேரணி

கடந்த வாரத்தில் படுகொலைகள் மற்றும் குண்டுவெடிப்புகளின் இருண்ட நாட்களுக்குத் திரும்புமோ என்ற அச்சத்தின் மத்தியில் கொலம்பியாவில் இடதுசாரி ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் ஆதரவாளர்கள் அவரது முன்மொழியப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து பேரணி நடத்தியுள்ளனர்.
செனட் மாற்று மசோதாவை விவாதிக்கும் வேளையில், ஜனாதிபதி முன்மொழியப்பட்ட சீர்திருத்தத்தின் மீதான வாக்கெடுப்புக்கு தொடர்ந்து ஆதரவைத் தெரிவிக்க தலைநகர் பொகோட்டா மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கினர்.
நாட்டின் தென்மேற்கில் ஏழு பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் மற்றும் பழமைவாத எதிர்க்கட்சி செனட்டரும் ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் யூரிப் டர்பே மீதான படுகொலை முயற்சி ஆகியவற்றிலிருந்து கொலம்பியா இன்னும் மீளாத நிலையில் இந்த பேரணி வந்துள்ளன.
“கடந்த நாட்களின் வன்முறையை நிராகரித்து, அரசாங்கத்திற்கு ஆதரவாக மக்கள் மீண்டும் தெருக்களில் இறங்க முடிவு செய்தனர்,” என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.